என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாசிக் ஊழியர்கள் 13-வது நாளாக போராட்டம்
    X

    கோப்பு படம்

    பாசிக் ஊழியர்கள் 13-வது நாளாக போராட்டம்

    • ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 17-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
    • பாசிக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், 114 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். மாத ந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 17-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பாசிக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், 114 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். மாத ந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க வேண்டும். 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அனைத்து ஊழியர்களுக்கும் விடுபட்ட சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 13-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்துக்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி,கோவிந்தாராசு, மகேந்திரன், மாணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குணசீலன், ராஜா, கண்ணம்மா,பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×