search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதா இளைஞரணி ரத்ததானம்
    X

    ரத்ததான முகாமை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    பா.ஜனதா இளைஞரணி ரத்ததானம்

    • வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • புதுவை மாநில பா.ஜனதா இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் மாவட்ட வரியாக நாடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சேவா வாரம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதன் ஒரு அங்கமாக புதுவை மாநில பா.ஜனதா இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் மாவட்ட வரியாக நாடைபெற்று வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நகர மாவட்ட பா.ஜனதா சார்பில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகர மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகுரு தலைமை தாங்கினார்.

    ரத்ததான முகாமை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் ரத்த தானம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா இளைஞரணி மாநில தலைவர் கோவேந்தன் கோபதி, மாநில பொதுச்செயலாளர் அமல்ராஜ், மாநில சமூக ஊடகப்பிரிவு சார்லஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட நிர்வாகிகள் பொதுச் செயலாளர் சத்யா, அரவிந்த், ராஜ்குமார் துணைத் தலைவர் மகேந்திரன், செயலாளர் விஷ்ணு, வேல்முருகன், ராஜ்மோகன், தொகுதி தலைவர் மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    Next Story
    ×