என் மலர்
புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உதவிதொகை ஆணையை வழங்கிய காட்சி.
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உதவித்தொகைக்கான ஆணை
- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கேட்டிற்கு கீழ் உள்ள ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மக்களுக்கு ஒன்று மற்றும் 2 குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும், உப்பளம் தொகுதியைச் சேர்ந்த 22 பயனாளிகளுக்கும் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
தி.மு.க தொகுதி செயலாளர் சக்திவேல், வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், தி.மு.க நிர்வாகிகள் தங்கவேல், ஹரிகிருஷ்ணன், விநாயகமூர்த்தி, ஜெயசீலன், ராகேஷ், ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






