search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு  போக்குவரத்து கழகத்தில் 139 பஸ்களில் 40 பஸ்கள் மட்டுமே இயக்கம்
    X

    புதுவை டெப்போவில் நிறுத்தப்பட்டுள்ள அரசு பஸ்கள்

    அரசு போக்குவரத்து கழகத்தில் 139 பஸ்களில் 40 பஸ்கள் மட்டுமே இயக்கம்

    • டிரைவர், கண்டக்டர்களுக்கு 2 மாத சம்பள வழங்கவில்லை என குற்றச்சாட்டு
    • புதிய பஸ்கள் வாங்கப் பட்டாலும் அதனை சரிவர பராமரிக்கப்படா ததால் அடிக்கடி பழுதாகி விடுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்து வதற்காக 1986-ம் ஆண்டு புதுவை சாலை போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.

    குறிப்பாக புதுவையில் கிராம பகுதிக ளுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கிராமபுற மக்கள் பெரிதும் பயன் அடைந்து வந்தனர். நாளடைவில் கிராம புற பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் குறைக்கப்பட்டன. அவ்வப்போது போக்கு வரத்து கழகத்துக்கு புதிய பஸ்கள் வாங்கப் பட்டாலும் அதனை சரிவர பராமரிக்கப்படா ததால் அடிக்கடி பழுதாகி விடுகிறது.

    போக்குவரத்து கழகத்துக்கு 139 பஸ்கள் இருந்தன. ஆனால் தற்போது 40 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்கு வரத்து கழகத்துக்கு புதிதாக வாங்கப்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டதில் நடுரோட்டிலேயே பழுதாகி நின்று போனது. இதனால் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பெரும்பாலான பயணிகள் அரசு பஸ்சை நம்பி உள்ளனர். ஆனால் அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பஸ்கள் படிப்படியாக குறைக்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர்.

    இதற்கிடையே புதுவை சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பஸ்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    மேலும் இந்த மாதம் டிரைவர், கண்டக்டர்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே இதுபோல் 14 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது. இந்த சஸ்பெண்டு நடவடிக்கையால் 10 பஸ்கள் நிறுத்தப்பட்டு ள்ளதாகவும் இதனால் ஒருநாளைக்கு 1.50 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.

    அதோடு சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2 வருடமாக போனசும் குறைந்த அளவே வழங்கப்பட்டுள்ளது.

    சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சம்பள பாக்கி மற்றும் போனஸ் தொகையை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பஸ்களை நன்றாக பராமரித்து சரியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள வலியுறுத்தி யுள்ளனர்.

    Next Story
    ×