என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஆஸ்பத்திரியில் நர்சு நகை திருட்டு
- தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
- ஆஸ்பத்திரியில் நர்சுகள் தினம் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஓய்வு அறையில் வைத்து சென்ற நர்சின் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
வில்லியனூர் அருகே செம்பியம் பாளையம் கோர்க்காடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பால பாஸ்கரன். இவரது மகள் மோனிகா (வயது 21). இவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்த மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நர்சுகள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் மோனிகா பரதநாட்டியம் நிகழ்ச்சியில் பங்கேற்க தனது 3 பவுன் தங்க நகைகளை கழற்றி கைபையில் வைத்து ஓய்வு அறையில் வைத்துவிட்டு சென்றார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்துவந்து கைபையை திறந்து பார்த்த போது நகையை காணாமல் மோனிகா அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து மோனிகா கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்