என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
என்.ஆர்.காங்-பா.ஜனதா ஆட்சிக்கு இல்லை முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கே ஆதரவு
- சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேட்டி
- புதுவை அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அமைச்சரவை மாற்றம், நீக்கம் என தெரிவித்தனர். எந்த மாற்றமும் நடக்கவில்லை.
புதுச்சேரி:
என்ஆர்.காங்-பா.ஜனதா ஆட்சிக்கு இல்லை முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கே ஆதரவு என்று சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேட்டியளித்துள்ளார்.
உருளை யன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஒரு வாரமாக புதுவை அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அமைச்சரவை மாற்றம், நீக்கம் என தெரிவித்தனர். எந்த மாற்றமும் நடக்கவில்லை.
மத்திய அரசால் அனுப்பப்பட்ட கவர்னரும், தலைமை செயலா ளரும்தான் புதுவையை ஆட்சி செய்கின்றனர். மக்களால் தேர்ந்தெடு க்கப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நிதித்துறை செயலர் முதல்-அமைச்சருக்கு தெரியாமல் மாற்றப்பட்டுள்ளார்.
என்.ஆர்.காங்கி ரஸ், பா.ஜனதா அரசுக்கு நான் ஆதரவு அளிக்கவில்லை. ரங்கசாமிக்கே ஆதரவு, அவருக்கு மட்டுமே ஆதரவு. புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதல்-அமைச்சர் இதுதொடர்பாக வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்