search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவசாயிகளுக்கு நிலப்பட்டா-தேனீ.ஜெயக்குமார் தகவல்
    X

    கோப்பு படம்.

    விவசாயிகளுக்கு நிலப்பட்டா-தேனீ.ஜெயக்குமார் தகவல்

    • பெங்களூருவில் நடந்த அனைத்து மாநில வேளாண் அமைச்சர்கள் மாநாடு, சிம்லாவில் நடந்த தலைமை செயலர்கள் மாநாட்டில் பல்வேறு விவாதங்கள் நடந்தது.
    • இதற்கான பட்டா வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு––றிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூருவில் நடந்த அனைத்து மாநில வேளாண் அமைச்சர்கள் மாநாடு, சிம்லாவில் நடந்த தலைமை செயலர்கள் மாநாட்டில் பல்வேறு விவாதங்கள் நடந்தது. இதில் விவசாயிகள் பற்றிய இணையத்தகவல் தொகுப்பு, மென்பொருள் மூலம் அவர்களின் நில உரிமை பற்றிய தகவல்களை இணைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு நிலப்பட்டா அவசியம். இதற்கான பட்டா வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. கிராமங்கள் வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் உழவர் உதவியகத்தில் பட்டா மாற்ற விண்ணப்பம் பெற்று ஆவணங்களுடன் சமர்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×