என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
நைஜீரிய வாலிபர் கைது
- புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்த வர்லெனின்.
- மூக வலைதளத்தில் சென்னை விமான நிலைய நிறுவனத்துக்கு கஸ்டமர்ஸ் சர்வீஸ் பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு இ.மெயில் மூலம் விண்ணப்பித்தார்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்த வர் லெனின். இவரது மனைவி ஜனனி.
கடந்த ஆண்டு இவர் சமூக வலைதளத்தில் சென்னை விமான நிலைய நிறுவனத்துக்கு கஸ்டமர்ஸ் சர்வீஸ் பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு இ.மெயில் மூலம் விண்ணப்பித்தார்.
அப்போது அந்த நிறுவன பெண் அனுசிங் மற்றும் பங்கஜ் ஆனந்த், ஹேமாகோபால்ரத்தினம் ஆகிய 3 பேர் ஜனனியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சிறுக சிறுக ஜனனியிடம் ரூ.16 லட்சத்து 48 ஆயிரத்து 680-ஐ பெற்றனர்.
ஆனால் அவர்கள் விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜனனி இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த லனன் குமாரை கைது செய்தனர்.
இதேபோல் புதுவையை சேர்ந்த அன்லா ஜெயில் என்பவரிடம் கனடாவிலிருந்து போன்மூலம் தொடர்பு கொண்டு ரூ.41 லட்சத்து 71 ஆயிரத்தை மோசடி செய்த மணிப்பூரை சேர்ந்த ரோனால் சிங் என்றவரையும்,
இதேபோல் புதுவையை சேர்ந்த சுைனனா நாரக்கிடம் கல்யாணம் செய்வதாக ஆன்லைன் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசிய கனடாவை சேர்ந்த அந்த மர்ம நபர் நான் டாக்டர் எனவும் சொந்தமாக ஆஸ்பத்திரி கட்டுவதற்காக பணம் தேவபைடுவதாக கூறி அந்த பெண்ணிடம் ரூ.54 லட்சம் மோசடி செய்தார். பின்னர் அந்த நபர்குறித்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் நைஜீரியாவை சேர்ந்த இமானுவேல் என்பது தெரியவந்தது. இந்த 3 மோசடி வழக்கிலும் தொடர்புடைய 3 பேரை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் கைது செய்து இன்று புதுவை அழைத்து வந்தனர்.பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிலைறயில் அடைக்கின்றனர்.லனன்குமாரிடமிருந் ரூ.4.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்