search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத்தோடு நீட் தேர்வு பயிற்சி
    X

    கோப்பு படம்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத்தோடு நீட் தேர்வு பயிற்சி

    • முன்னாள் எம்.பி ராமதாஸ் வலியுறுத்தல்
    • 910 இடங்களில் 18 அரசு பள்ளி மாணவர்கள்தான் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் புதுவை கல்வித்துறையை மதிப்பீடு செய்ய வாய்ப்பளித்துள்ளது. இந்த ஆண்டு புதுவையில் நீட் தேர்வு எழுதிய 5,714 மாணவர்களில் 3,140 பேர் தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 54.9 இது கடந்த ஆண்டைவிட 2.11 சதவீதம் அதிகம்.

    புதுவையின் தேர்ச்சி சதவீதம் தேசிய சதவீதமான 56.2 சதவீதத்தைவிட 1.3 சதவீதம் குறைவாக உள்ளது. தேசியளவில் புதுவை குறைந்த தேர்ச்சி சதவீதத்தையே பெற்றுள்ளது. புதுவை கல்வித்துறையின் செயல்பாடு சரியில்லாமல் குறைவாக உள்ளதையே இது காட்டுகிறது கடந்த 3 ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ இடங்களான 910 இடங்களில் 18 அரசு பள்ளி மாணவர்கள்தான் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

    தனியார் பள்ளிகளில் இருந்து 818 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு ஒரு தனியார் பள்ளியில் இருந்து மட்டும் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 177 பேர் 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். தனியார் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும்போதே நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுகின்றனர். இந்த சாதகமான சூழ்நிலை புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு இல்லாததால் சாதிக்க முடியவில்லை.

    தனியார் பள்ளிகள் மேற்கொள்ளும் சிறந்த நடைமுறைகளை புதுவை அரசு பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×