search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேசிய கயிறு இழுக்கும் போட்டி புதுவை அணி வீரர்கள் மகாராஷ்டிரா பயணம்
    X

    தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் புதுவை அணி வீரர்களை மகாராஷ்டிரா பயணம் வழியனுப்பி வைத்த காட்சி.

    தேசிய கயிறு இழுக்கும் போட்டி புதுவை அணி வீரர்கள் மகாராஷ்டிரா பயணம்

    • தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழியனுப்பி வைத்தார்
    • 3 அணியை சேர்ந்த 30 விளையாட்டு வீரர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    36-வது அகில இந்திய அளவிலான சீனியர், ஜூனியர் மற்றும் ஆடவர் மகளிர் கயிறு இழுக்கும் போட்டி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 9-ந்தேதி வரை மகாராஷ்டிரா மாநிலம் பால்காரில் நடைபெற உள்ளது.

    போட்டியில் புதுவை மாநில கயிறு இழுக்கும் சங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக 3 அணியை சேர்ந்த 30 விளையாட்டு வீரர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்களை தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் புதுவை ரெயில் நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநில கயிறு இழுக்கும் சங்கத்தின் செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பாரதி மற்றும் உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் அகிலன், முருகன், சேட்டு என்ற வேல்முருகன், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×