search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதல்-அமைச்சர்  ரங்கசாமி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

    • எம்.பி. ராகுல்காந்தி–யின் பாத யாத்திரையை சகித்துக்கொள்ள முடியாமல் அவர் அணிந்திருந்த டீ-சர்ட் பற்றி பா.ஜனதாவினர் விமர்சித்துள்ளனர்.
    • உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு தேசியக்கொடியை கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி

    நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி–யின் பாத யாத்திரையை சகித்துக்கொள்ள முடியாமல் அவர் அணிந்திருந்த

    டீ-சர்ட் பற்றி பா.ஜனதாவினர் விமர்சித்துள்ளனர். அது திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீ-சர்ட். பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 3 முறை உடை மாற்றுகிறார்.

    அவை இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்காவில் இருந்து வருகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா அணியும் ஆடைகளும் வெளிநாட்டிலிருந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு தேசியக்கொடியை கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்தனர்.

    காங்கிரசை குறைகூற பா.ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழிசை பாதயாத்திரை பற்றி ஏளனமாக பேசியுள்ளார். நீண்ட நித்திரையில் இருந்தவர்கள் தேசத்தை ஒருங்கிணைக்க பாதயாத்திரை போவதாக கூறியுள்ளார். தெலுங்கானாவுக்குத்தான் கவர்னர்.

    அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழிசையை உதாசீனப்படுத்துகின்றனர். எனவேதான் புதுவையில் அதிக நாட்கள் தங்கியுள்ளார்.

    கவர்னர் பதவியில் உள்ளவர்கள் அரசியல் செய்யக்கூடாது. அவர் பாதயாத்திரையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. கவர்னர் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அரசியல் செய்ய விரும்பினால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம்.

    பிரதமர் மோடி பிறந்தநாளை நிலத்தடிநீரை பாதுகாக்கும் வகையில் கொண்டாட அறிவுறுத்தியுள்ளனர். புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா முதல்-அமைச்சர் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார். இதில் ரூ.90 கோடி பணம் கைமாறியுள்ளது. இதை பா.ஜனதா எம்.எல்.ஏ. சட்டசபையில் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளோம். இந்த விஷயத்தில் பா.ஜனதா தலைவர்களின் பதில் என்ன? இதுகுறித்து ரங்கசாமி மக்கள் மத்தியில் பதில் சொல்ல வேண்டும்.

    புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை மக்களின் சொத்துக்கள் அபகரிப்பு தொடர்பாக பிரான்சில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    இது இந்தியாவுக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ரங்கசாமி பதவிக்கு வரும்போ–தெல்லாம் பிரெஞ்சு குடிமக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படுகிறது. பல காவல்நிலையங்களில் புகார் உள்ளது. ஆனால் ரங்கசாமி புகாரே இல்லை என தவறான தகவல் அளிக்கிறார்.

    பிரெஞ்சு தூதரே நேரடியாக சட்டசபைக்கு வந்து ரங்கசாமியிடம் புகார் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்து.

    புதுவையில் ரவுடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி அலுவலகம் ரவுடிகள் கூடாரமாக மாறியதுதான் காரணம். முதல்-அமைச்சர் அலுவலகத்தி–லேயே ரவுடிகள் இருந்தால் காவல்துறையினர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.

    இதனால் ஒட்டுமொத்த நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. சொத்து அபகரிப்பு, ரவுடிகள் நடமாட்டம், வேலையின்மை, நிதி பற்றாக்குறை என அனைத்துக்கும் ரங்கசாமியே முழு பொறுப்பேற்க வேண்டும்.

    Next Story
    ×