search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செய்முறை பயிற்சி வகுப்புக்கு 10-ந் தேதிக்குள் பதிய வேண்டும்
    X

    கோப்பு படம்.

    செய்முறை பயிற்சி வகுப்புக்கு 10-ந் தேதிக்குள் பதிய வேண்டும்

    • எஸ்.எஸ்.எல்.சி. தனி தேர்வருக்கு கல்விதுறை அறிவுறுத்தல்
    • அனைத்து தனித் தேர்வர்களும் வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற கல்வியாண்டுக் கான 10-ம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க நேரடி தனி தேர்வர்கள், அறிவியல் பாடத்தில் தோல்வியடை ந்தவர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்யலாம்.

    அனைத்து தனித் தேர்வர்களும் வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். ஆண்கள் வில்லியனூர் ஐடியல் மேல்நிலைப்பள்ளி யிலும், பெண்கள் புதுவை இமாகுலேட் பள்ளியிலும் பதிவு செய்யலாம். இதற்கான படிவத்தை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சேவை மையங்களில் ஒப்படை த்து அங்கு தரப்படும் ஒப்புகை சீட்டின் எண் மூலம் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

    இதன்பின் மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அந்த மையங்களில் நடத்தப்ப டும் பயிற்சி வகுப்பில் 80 சதவீத வருகை பதிவு உள்ளவர்கள் மட்டுமே பொது தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

    செய்முறை பயிற்சி பெற்றவர்கள் செய்முறை தேர்வு எழுத வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×