search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நகராட்சி ஆணையரிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு
    X

    நகராட்சி ஆணையரிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

    நகராட்சி ஆணையரிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு

    • கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடையில்லா சான்று வழங்க வேண்டும்.
    • தற்போது 3-வது முறையாக கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகு திக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலை அவ்வை நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் சுமார் 35 ஆண்டுகள் பழமையானது.

    மேலும் 2 முறை கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது 3-வது முறையாக கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து கோவிலை புதுப்பித்து கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் அளிக்க கோரி கென்னடி எம்.எல்.ஏ. புதுவை தாசில்தார் பிரீதிவி மற்றும் நகராட்சி ஆணையர் சிவகுமாரிடம் மனு அளித்தார்.

    மேலும் திப்புரா யப்பேட்டையில் அமைந்து ள்ள இடுகாட்டில் பெயர் பலகை அமைக்கவும் மற்றும் மின் விளக்கு தண்ணீர் வசதி செய்துதர வேண்டும் என்று கென்னடி எம்.எல்.ஏ. அவர்களிடம் கேட்டு கொண்டார்.

    இந்நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×