என் மலர்
புதுச்சேரி

எம்.ஐ.டி. கல்லூரியில் தனியார் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்ற காட்சி.
எம்.ஐ.டி. கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
- அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கி ணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- 2023-24 இறுதி ஆண்டு இளங்கலை பொறியியல் துறை மாணவ-மாணவி கள் 200-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் சென்னை ரெனால்ட் நிசான் டெக் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகா மிற்கு அந்நிறுவ னத்தின் மனிதவளத்துறை மேலா ளர்கள் ராமசாமி, ஸ்ரீகாந்த் குழுவினர் முன்னிலையில் ஆன்லைன் எழுத்து தேர்வு, மற்றும் நேர் குழு விவாதம் முகத்தேர்வு ஆகிய சுற் றுக்களாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு னர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செய லாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கி ணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் மணக்குள கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மயிலம் பொறியியல் கல்லூரி, ஸ்ரீம ணக்குள விநாயகர் பொறி யியல் கல்லூரி, மற்றும் புதுவை, கடலூர், விழுப்பு ரம் நகரை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பொறியி யல் கல்லூரிகளிலிருந்து 2023-24 இறுதி ஆண்டு இளங்கலை பொறியியல் துறை மாணவ-மாணவி கள் 200-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
ஏற்பா டுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.






