search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.ஐ.டி., கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    அவர் ஹோல்டர்ஸ் பவுண்டேசன் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது எடுத்த படம்.

    எம்.ஐ.டி., கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியும், அவர் ஹோல்டர்ஸ் பவுண்டேசன் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
    • வேலை வாய்ப்புத் துறை அதிகாரி ஜெயகுமார் மற்றும் துறை பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியும், அவர் ஹோல்டர்ஸ் பவுண்டேசன் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

    அவர் ஷோல்டர்ஸ் பவுண்டேசன்' அமைப்பு கூகுள் 'கிரோவ் வித் கூகுள்' தலைப்பில் மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்தல், திறன் மேம்படுத்தல் உள்ளிட்ட விஷயங்களை செய்வ தற்கான ஒப்பந்தமாகும்.

    இந்த ஒப்பந்த நோக்கம், பொறியியல், மேலாண்மை துறை மாணவர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள், திறன், வேலை வாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதாகும்.

    வேலை வாய்ப்புக்கு தேவையான திறன் சார்ந்த ஆன்லைன் சர்டிபிகேஷன் மற்றும் உதவித்தொகை பெறும் வசதிகளை நாஸ்காமோடு இணைந்து சேவை வழங்கப்படுகிறது.

    இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    வேலை வாய்ப்புத் துறை அதிகாரி ஜெயகுமார் மற்றும் துறை பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். எம்.ஐ.டி., கல்லூரி முதல்வர் மலர்கண், அவர் ஷோல்டர்ஸ் பவுண்டேசன் அமைப்பு சார்பில் மாணிக்கபாரதி, பிரேம் ஆனந்த், எஸ்.எஸ்.டி. இன்போ சொல்யூசன் உரிமையாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறி கொள்ளப்பட்டது.

    Next Story
    ×