என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
- மாவட்ட தலைவர்கள் ஜானகிராமன், சம்பத், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- வட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் சேவைப் பணிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவராக முகமது அசாருதீன், செயலாளராக இளங்கோவன், பொருளாளராக செல்வகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் பதவியேற்பு விழா திருக்க னூர் போன் நேரு மேல்நி லைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைவர் முகமது அசாருதீன் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர்கள் ஜானகிராமன், சம்பத், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜன், சரவணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினர். முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் சேவைப் பணிகளை தொடக்கி வைத்தார்.
விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டியதுடன், 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் லயன்ஸ் சங்க மண்டல தலைவர் புஷ்ப ராஜ், வட்டார தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் பரந்தாமன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்