search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மருத்துவ மாணவி சாதனை
    X

    சாதனை படைத்த மாணவியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சால்வை அணிவித்து பாராட்டிய காட்சி.

    மருத்துவ மாணவி சாதனை

    • உலக பொதுமறையான திருக்குறள் மற்றும் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பிய நூல்களை கற்க இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவியை சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    உலக பொதுமறையான திருக்குறள் மற்றும் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பிய நூல்களை கற்க இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.

    அனைவரும் தமிழ் காப்பியங்களையும், அற நூல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மருத்துவ கல்லூரி மாணவி ஸ்ரீ கஜலட்சுமி சிறிய துண்டு பேப்பரில் 1330 திருக்குறளை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

    புதுவையில் உள்ள ரெசிடென்சி பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 15 X 42 செ.மீ. அளவில் உள்ள சிறிய காகிதத்தில் 12 மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவியை சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார். மேலும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், லட்சுமிகாந்தன், பள்ளி தாளாளர் கிரிஸ்டிராஜ் ஆகியோர் உலக சாதனை படைத்த மாணவியை பாராட்டினார்கள்.

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை விழிகள் அறக்கட்டளையின் நிர்வாகி பிரேம்குமார், செயலாளர் கீர்த்தனா தலைமையில் தன்னார்வலர்கள் செய்திருத்தனர்.

    Next Story
    ×