என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மருத்துவ மாணவர் சேர்க்கையை உறுதி படுத்த வேண்டும்
- மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் 200-பேர் படிக்கும் மாணவர்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் சேர்க்கைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவை பெற்றோர்-மாணவர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னர் தமிழிசை மற்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிரு ப்பதாவது:-
தேசிய மருத்துவ கமிட்டியின் பொது அறிவிப்பின்படி இளநிலை மருத்துவ கல்லூரியின் இயக்குநர் சம்பு ஷரன் குமார் விடுத்துள்ள சுற்றறிக்கையில் மாநில மற்றும் யூனியன் பிரதே சங்களால் 30.09.2023 பிறகு நடத்தப்பட்ட மருத்துவ கலந்தாய்வை தகுதியற்றது எனக் கூறி நிராகரித்து ள்ளது.
புதுவை சுகாதாரத்துறை க்கும் மற்றும் சென்டாக் நிர்வாகத்திற்கும் பலமுறை எங்கள் அமைப்பின் மூலம் மருத்துவ கலந்தாய்வை காலத்தோடு நடத்திட வலியுறுத்தி மனு அளித்தி ருந்தோம்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 4-ந் தேதி 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு மற்றும் 14-ந் தேதி மாப்பாப் கலந்தாய்வு நடத்தி அரசு ஒதுக்கீட்டில் 50-க்கு மேற்பட்ட மாணவர்களும் மற்றும் நிர்வாக மற்றும் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் 200-பேர் படிக்கும் மாணவர்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் சேர்க்கைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே காலதாமதமாக நடைபெற்ற கலந்தாய்விற்கு மத்திய அரசையும், மத்திய கலந்தாய்வு கமிட்டியையும் அணுகி உரிய அனுமதி யினைப் பெறவேண்டும். மேலும் இது உச்சநீதி மன்றத்தின் வழக்கின் தீர்ப்பை மேற்கோள்காட்டி தற்போது தேசிய மருத்துவ கவுன்சில் 30.09.2023-க்குள் அனைத்து கவுன்சிலையும் முடித்துக் கொ ள்ள வேண்டும் என அறிவித்து ள்ளதால் புதுவை அரசும், உச்ச நீதிமன்றத்தினை அணுகி காலதாமதமாக சேர்க்கைப் பெற்ற மாண வர்களின் சேர்க்கையினை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்