search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மருத்துவக்கல்வி கட்டணத்தை  நிர்ணயம் செய்ய வேண்டும்
    X

    கோப்பு படம்.

    மருத்துவக்கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • அரசு ஒதுக்கீடு மருத்துவ இடங்களுக்கு கட்டணமாக ரூ.3 லட்சத்து 80 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், சென்டாக் மருத்துவ கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் அரசு ஒதுக்கீடு மருத்துவ இடங்களுக்கு கட்டணமாக ரூ.3 லட்சத்து 80 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு சுமார் 50 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு ள்ளதாக அறிகிறேன். இது முற்றிலும் தவறான செயலாகும். தனியார் மருத்துவகல்லூரி நிர்வாகங்களுக்கு ஆதரவாக அரசு ஒதுக்கீடு மருத்துவ இடங்களுக்கான கட்டணத்தை உயர்த்துவது ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாக அமையும்.

    ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மாணவர், பெற்றோர்களின் கருத்துக்களையும் கட்டணக்குழு தலைவர் பரிசீலனை செய்து கருணை உள்ளத்தோடு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கூறியுள்ளார்.

    Next Story
    ×