என் மலர்
புதுச்சேரி

தற்காப்பு கலை பயிற்சி பரிசளிப்பு விழா நடைபெற்ற காட்சி.
தற்காப்பு கலை பயிற்சி பரிசளிப்பு விழா
- புதுவை அரசு கல்வித்துறையின் சார்பில் தற்காப்பு கலை பயிற்சி 3 மாதங்களாக அளிக்கப்பட்டது.
- மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியினை மேம்படுத்த ஆலோசனை வழங்கினார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு புதுவை அரசு கல்வித்துறையின் சார்பில் தற்காப்பு கலை பயிற்சி 3 மாதங்களாக அளிக்கப்பட்டது.
சான்றிதழ் வழங்கும் விழாவில் பள்ளியின் துணை முதல்வர் சுகந்த குமாரி தலைமை தாங்கி, பயிற்சி பெற்ற கராத்தே மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
புதுவை சென்சாய் கராத்தே தலைமை பயிற்சியாளர் மதிஒளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியினை மேம்படுத்த ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர் கவிதாவீரமுத்து முன்னிலை வகித்தார். ஆசிரியர் குமார் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கராத்தே பயிற்சியாளர்கள் கோபாலகிருஷ்ணன், வழக்கீல் தினேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






