search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காதல் திருமணம் செய்த பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    காதல் திருமணம் செய்த பெண் தூக்கு போட்டு தற்கொலை

    • கணவர் குடித்து விட்டு தகராறு செய்ததால் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சுபா வீட்டில் மகாளய அமாவாசையையொட்டி பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    கணவர் குடித்து விட்டு தகராறு செய்ததால் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    லாஸ்பேட்டை மகாவீர்நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சுபா(வயது20). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவரும் சாமிபிள்ளை தோட்டம் அருகே தவமணி நகரை சேர்ந்த பெயிண்டர் பாலாஜி என்பவரும் கடந்த 1½ வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

    சமீப காலமாக பாலாஜி மது குடித்து விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார். சுபா வீட்டில் மகாளய அமாவாசையையொட்டி பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போது மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த பாலாஜி சுபாவிடம் தகராறு செய்தார். இதனால் கணவரிடம் கோபித்துகொண்டு சுபா தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    சிறிது நேரம் கழித்து குழந்தையுடன் சுபா அறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். வெகுநேரமாக கதவு திறக்கப்படவில்லை.

    இந்தநிலையில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதால் சுபாவின் பெற்றோர் கதவை தட்டினர். ஆனால் சுபா கதவை திறக்கவில்லை. இதனால் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை அறிந்த சுபாவின் பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சுபா சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது தந்தை முருகேசன் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுபாவுக்கு திருமணமாகி 1½ வருடமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×