என் மலர்
புதுச்சேரி

கூட்டத்தில் வையாபுரி மணிகண்டன் பேசிய போது எடுத்த படம்.
மதுஆலை, பார்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்-அ.தி.மு.க. தீர்மானம்
- புதுவை மாநிலமெங்கும் 200-க்கும் மேற்பட்ட கவர்ச்சி நடன மதுபார்கள், மதுபான தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை என்.ஆர்.காங்கிரஸ் அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.புதுவை மாநிலமெங்கும் 200-க்கும் மேற்பட்ட கவர்ச்சி நடன மதுபார்கள், மதுபான தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை என்.ஆர்.காங்கிரஸ் அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
- பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துவதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிப்பது.
புதுச்சேரி:
மறைந்த தமிழக முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவன தலைவருமான ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் முத்தியால்பேட்டை அ.தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
ஆலோசனை கூட்டத்திற்கு துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஜெயலலிதா பிறந்தநாளை, மாநிலம் முழுவதும் கோலாகலமாக ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கி சீரும், சிறப்புமாக கொண்டாடுவது.
புதுவையில் ஜெயலலிதாவுக்கு உருவ சிலை அமைத்து, பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட அரசு அறிவிப்பு வெளியிடாதது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட்ட அ.தி.மு.க. தொண்டர்களின் குமுறலா கவும், வேதனையாகவும் உள்ளது. இதை உணர்ந்து புதுவை அரசு உடனடியாக ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து உருவச்சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட வேண்டும்.
புதுவை மாநிலமெங்கும் 200-க்கும் மேற்பட்ட கவர்ச்சி நடன மதுபார்கள், மதுபான தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை என்.ஆர்.காங்கிரஸ் அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.மதுஆலை, மதுபார்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தும் பெண்களின் உணர்வுக்கு முதல்- அமைச்சர் மதிப்பளித்து வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துவதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிப்பது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், உதயசூரியன், செல்வம், முருகேசன், அந்துவான், மண்ணாங்கட்டி, தனலட்சுமி, ராதா, காந்தி, முனியாண்டி, வினோத், எத்திராஜ், ஆறுமுகம், மற்றும் அ.தி.மு.க. மேற்கு மாநில நிர்வாகிகள் விக்னேஷ் காசிநாதன், மணி, கோபால், ராமமூர்த்தி, காதர் கன்னியப்பன், பரமசிவம், ஜெயபால், நாராயணசாமி, கலைமணி லட்சுமணன், ராஜசேகர், பாவாடை அங்கப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






