என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
சூற்றுச்சூழலை பாதுகாப்போம்-என்.ஆர்.இலக்கிய பேரவை அறிக்கை
- தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல்நாள் வரும் போகி பண் டிகை பழைய பொருட்களை எரித்து புகையை உண்டாக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
- போகி பண்டிகை நாளில் பிளாஸ்டிக் மற்றும் டயர் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
புதுச்சேரி:
என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல்நாள் வரும் போகி பண் டிகை பழைய பொருட்களை எரித்து புகையை உண்டாக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சிகரெட் புகை மட்டும் தீங்கானது அல்ல போகிப் பண்டி கையின் பொழுது எரிக்கப்படும் அனைத்து பொருட்களில் இருந்து வருகின்ற புகையும் மனித உடலுக்கு பகைதான். இது குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், மாணவர் கள் தங்கள் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதற்கு பதி லாக அந்த பொருட்களை துப்புரவு தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
போகி பண்டிகை நாளில் பிளாஸ்டிக் மற்றும் டயர் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். இதனால் ஏற்படும் புகை மண்டலங்கள் வாகன விபத்துகளும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவும் வழி வகுக்கிறது. எனவே போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்காமல் சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்