search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சூற்றுச்சூழலை பாதுகாப்போம்-என்.ஆர்.இலக்கிய பேரவை அறிக்கை
    X

    கோப்பு படம்.

    சூற்றுச்சூழலை பாதுகாப்போம்-என்.ஆர்.இலக்கிய பேரவை அறிக்கை

    • தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல்நாள் வரும் போகி பண் டிகை பழைய பொருட்களை எரித்து புகையை உண்டாக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
    • போகி பண்டிகை நாளில் பிளாஸ்டிக் மற்றும் டயர் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

    புதுச்சேரி:

    என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல்நாள் வரும் போகி பண் டிகை பழைய பொருட்களை எரித்து புகையை உண்டாக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சிகரெட் புகை மட்டும் தீங்கானது அல்ல போகிப் பண்டி கையின் பொழுது எரிக்கப்படும் அனைத்து பொருட்களில் இருந்து வருகின்ற புகையும் மனித உடலுக்கு பகைதான். இது குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், மாணவர் கள் தங்கள் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதற்கு பதி லாக அந்த பொருட்களை துப்புரவு தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

    போகி பண்டிகை நாளில் பிளாஸ்டிக் மற்றும் டயர் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். இதனால் ஏற்படும் புகை மண்டலங்கள் வாகன விபத்துகளும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவும் வழி வகுக்கிறது. எனவே போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்காமல் சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×