search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காங்கிரஸ் கட்சியின் கையோடு கைகோர்ப்போம் ஒற்றுமை பேரணி
    X

    காலாப்பட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் நடைபயணம் மேற்கொண்ட காட்சி.

    காங்கிரஸ் கட்சியின் கையோடு கைகோர்ப்போம் ஒற்றுமை பேரணி

    • காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜூடோ யாத்திரைக்கு ஆதரவாக கையோடு கைகோர்க்கும் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டனர்.
    • ஒற்றுமை நடை பயணத்திற்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜூடோ யாத்திரைக்கு ஆதரவாக கையோடு கைகோர்க்கும் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காலாப்பட்டு தொகுதி கனக ெசட்டிக்குளத்தில் தொடங்கிய ஒற்றுமை நடை பயணத்திற்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மற்றும் மாநில, வட்டார தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், மகளிர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளும் காலப்பட்டு தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் உருளையன்பேட்டையில் நடைபெற்ற நடைபயணத்திற்கு, வட்டாரத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், மாநில பொதுச் செயலாளர்கள் வேல்முருகன், தனுசு, ரகு மான், இளையராஜா, வக்கீல் அணி தலைவர் மருதுபாண்டியன், முன்னாள் இளைஞரணி செயல் தலைவர் வேல்முருகன், இளைஞரணி மாநில தலைவர் ஆனந்தபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுவை காந்தி வீதியில் தொங்கிய நடை பயணம், புஸ்சி வீதி, பாரதி வீதி, அண்ணா சாலை, கோவிந்தசாலை வழி யாக பாலாஜி தியேட்டர் அருகே முடிவடைந்தது.நடைபயணத்தில், அதானிக்கு ஆதரவாக செயல் படும் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×