என் மலர்
புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ. பொதுபணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்த காட்சி.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
- வாணரப்பேட்டை தாவிரவியல் பூங்கா மற்றும் தாமரை நகர் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்
- உடனடி நடவடிக்கை எடுப்பதாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் உறுதியளித்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பிரான்ஸ்சுவா தோப்பு, காளியம்மன் கோவில் தோப்பு, முருகசாமி நகர், ஜெகநாதர் படையாட்சி வீதி, நாராயணசாமி வீதி, என்ஜினீயர் தோட்டம், அன்னை இந்திரா நகர், பல்லவன் வீதி, எல்லையம்மன் கோவில் தோப்பு, ஆட்டுப்பட்டி, ரோடியர்பேட், தாமரை நகர், தமிழ்தாய் நகர், ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.
இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ. கென்னடி பொதுபணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வாணரப்பேட்டை தாவிரவியல் பூங்கா மற்றும் தாமரை நகர் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் ஆட்டுப்பட்டி மற்றும் திப்புராயப்பேட்டை பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இக்கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின் போது மீனவர் அணி விநாயகம், கிளைச் செயலாளர்கள் செல்வம், ராகேஷ், விடுதலை சிறுத்தை கட்சி தெஸீர், தி.மு.க.நிர்வாகிகள் பாலு, ஜெயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.






