search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நீதிபதி, ஊழியர்கள் பணி இடங்களை நிரப்ப வேண்டும்
    X

    ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் புதுவை வக்கீல் சங்கத்தினர் மனு அளித்த காட்சி.

    நீதிபதி, ஊழியர்கள் பணி இடங்களை நிரப்ப வேண்டும்

    • ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் புதுவை வக்கீல் சங்கத்தினர் மனு
    • புதுவை மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அவரிடம் சமர்ப்பித்தார் .

    புதுச்சேரி:

    புதுவை வந்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காப்பூர் வாலாவை பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமரன் சந்தித்து சால்வை அணிவித்தார்.

    சந்திப்பின் போது தலைமை நீதிபதியிடம் புதுவையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இபைலிங் முறையில் தற்போது வழக்கறிஞர் சங்கத்திற்கு உள்ள பல்வேறு இடர்பாடுகள் பற்றியும், மேலும் இ ஃபைலிங் செக்ஷன் அனைத்து நீதிமன்றங்களிலும் உருவாக்க வேண்டும் என்றும், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும் புதுவையில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் மற்றும் வெகு நாட்களாக காலியாக உள்ள நீதிமன்ற ஊழியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் நடந்து முடிந்த புதுவை மாநிலத்திற்கான நீதிபதி பணிக்கான தேர்வு மூலம் அனைத்து நீதிபதி பணியிடங்களையும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அவரிடம் சமர்ப்பித்தார் .

    மனுவை பெற்ற தலைமை நீதிபதி கனிவுடன் பரிசினை செய்வதாக உறுதியளித்தார். பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் இணைச் செயலாளர் திருமலைவாசன், மற்றும் அரசு வழக்கறிஞர் ராஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×