search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மூதாட்டியிடம் நகை பறிப்பு
    X

    கோப்பு படம்.

    மூதாட்டியிடம் நகை பறிப்பு

    • மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் நகையை பறித்து சென்றார்.
    • சின்னக்கோட்டக்குப்பம் ரெயின்போ கார்டன் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டையில் பட்டப்பகலில் நடந்து சென்ற மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் நகையை பறித்து சென்றார்.

    புதுவையை அடுத்த தமிழகப்பகுதியான சின்னக்கோட்டக்குப்பம் ரெயின்போ கார்டன் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கலியம்மாள் (வயது 67). ஓய்வு பெற்ற தபால் அதிகாரி. நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் மதியம் லாஸ்பேட்டையில் உள்ள தனது மகளை பார்க்க கலியம்மாள் வீட்டில் இருந்து நடந்து வந்தார்.

    சாமிப்பிள்ளை தோட்டம் ஆதிசங்கர் வீதியில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்த மர்ம வாலிபர் திடீரென கலியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தான். கலியம்மாள் அதிர்ச்சியடைந்து அலறல் சத்தம் போடுவதற்குள் அந்த வாலிபர் செயினுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டான்.

    இதனால் செயினை பறிகொடுத்த கலியம்மாள் இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×