என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜான்குமார் எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும்
    X

    திராவிடர் விடுதலைக்கழகம் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

    ஜான்குமார் எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும்

    • திராவிடர் விடுதலைக்கழகம் ஆர்ப்பாட்டம்
    • நிலமோசடியில் தொடர்புடைய சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட பதிவாளர் ரமேஷ், தாசில்தார் பாலாஜியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். இந்தி யகம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், பெருமாள், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், திராவிடர் கழகம் சிவவீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், தமிழர் களம் அழகர், அம்பேத்கர் தொண்டர்படை பாவாடைராயன், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    காமட்சியம்மன் கோவில் நிலமோசடியில் தொடர்புடைய சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட பதிவாளர் ரமேஷ், தாசில்தார் பாலாஜியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கோவில் சொத்துக்களை வாங்கிய எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    Next Story
    ×