search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிரதமர் மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது
    X

    கோப்பு படம்.

    பிரதமர் மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
    • வெற்றி இந்த தேசத்தின் குடிமக்களுக்கு நிச்சயமாக புதிய நம்பிக்கையையும் பிரகாசமான வழியையும் கொண்டு வரும் என்று நான் கருதுகிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி 3 மாநில தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர், உள்துறை மந்திரி, பா.ஜனதா தேசிய தலைவர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    4 மாநில தேர்தல்களில் 3 மாநிலத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இந்த வெற்றியானது மக்கள் பிரதமர் மீது வைத்திருக்கும் உண்மையான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது. நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய சேவைக்கான வெற்றி யாகவும் அமைந் துள்ளது.

    உலக அளவில் சிறந்த தலைவராக பிரதமர் மோடி விளங்குவதை வெற்றி நிரூபிக்கிறது. மேலும், இந்திய மக்கள் பிரதமர் மோடியின் மீது வைத்திருக்கும் அன்பையும்

    வெற்றிகள் வெளிப் படுத்தி உள்ளன. இந்த தருணத்தில் பிரதமரை வாழ்த்துகிறேன்.

    உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அனுப்பி யுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியி ருப்பதாவது:-

    3 மாநிலங்களில் பெரும்பான்மை ஆட்சியை அமைக்கும் அளவுக்கு சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தேசத்திற்கு தங்களின் கடின அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பும், மத்திய அரசின் திறமையான அரசியல் திறமையும் இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணம். இந்த வெற்றி இந்த தேசத்தின் குடிமக்களுக்கு நிச்சயமாக புதிய நம்பிக்கையையும் பிரகாசமான வழியையும் கொண்டு வரும் என்று நான் கருதுகிறேன். இந்த மகத்தான வெற்றிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

    பா.ஜனதா தேசியத் தலைவர் நட்டாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியி ருப்பதாவது:-

    4 மாநில சட்டசபை தேர்தல்களில் 3 மாநிலங்களில் பா.ஜனதா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வலுவான ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வலிமையான தேசியக் கட்சி பா.ஜனதா என்பதை இந்தத் தேர்தல்கள் மீண்டும் நிரூபித்துள்ளன.

    தேசத்தைப் பாதுகாப்ப திலும், அதன் பெருமையை நிலை நாட்டுவதிலும், மக்கள் நலனிலும் பா.ஜனதா அரசுக்கு இந்த வெற்றிக்கு உந்து சக்தியாக உள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த வெற்றி தருணத்தில் உங்களுடனும், உங்கள் கட்சி தொண்டர்களுடனும் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு முதல்- அமைச்சர் ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×