search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூடப்பாக்கத்தில் ஈஷா புத்துணர்வு வாலிபால் போட்டி
    X

    கூடப்பாக்கத்தில் வாலிபால் போட்டியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்த காட்சி.

    கூடப்பாக்கத்தில் ஈஷா புத்துணர்வு வாலிபால் போட்டி

    • வாலிபால் போட்டிக்கான பரிசுத்தொகை முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.9 ஆயிரம் , த்ரோபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    • ரூ.5 லட்சமும், த்ரோபால் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூடப்பாக்கம் குலோத்துங்க சோழன் விளையாட்டு திடலில் ஈஷா புத்துணர்வு கோப்பை வாலிபால் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்துகொண்டு வாலிபால் போட்டியினை தொடங்கி வைத்தார். பாஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், குலோதுங்க சோழன் விளையாட்டு கழக தலைவர் தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கேப்டன் ராமதாஸ் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முதல் கட்ட வாலிபால் போட்டிக்கான பரிசுத்தொகை முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.9 ஆயிரம் , த்ரோபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    வாலிபால் இறுதிப்போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.5 லட்சமும், த்ரோபால் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியினை ஈஷா கணேசன் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக் கான ஏற்பாட்டினை ஈஷா நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×