search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மருத்துவ கல்வியில் அரசு பள்ளி  மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு
    X

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அ.தி.மு.க.வினர் மனு அளித்த காட்சி.

    மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு

    • கவர்னரிடம் அ.தி.மு.க. மனு
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீட்டை வழங்க உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கவர்னர் தமிழிசையை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் ஆண்டு தோறும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெறுவதால் விரல் விட்டு எண்ணக்கூடிய மாணவர்கள் மட்டுமே தகுதி அடிப்படையில் மருத்துவ கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆண்டும் நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள 100-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பெற்றிருந்தும் ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியில் சேரும் சூழ்நிலை உள்ளது.

    சென்டாக் மருத்துவக் கவுன்சிலில் மொத்தமுள்ள 389 அரசின் மருத்துவ இடங்களில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினால், அரசு பள்ளியில் படித்த சுமார் 28 மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.

    எனவே, இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெறும் சென்டாக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீட்டை வழங்க உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சந்திப்பின் போது மாநில அவை தலைவர் அன்பானந்தம்,மாநில இணைச் செயலாளரும் . முன்னாள் கவுன்சிலருமான கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார் , மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×