என் மலர்
புதுச்சேரி

இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேசிய காட்சி.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர் தொகுதி 28-வது மாநாடு நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மாநாட்டு கொடி ஏற்றி வைத்து பேசினார்.
- இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் சலீம் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர் தொகுதி 28-வது மாநாடு நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மாநாட்டு கொடி ஏற்றி வைத்து பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் சலீம் மாநாட்டை தொடங்கி வைத்தார். பாகூர் தொகுதி குழு உறுப்பினர் விஜயபாலன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தொகுதி செயலாளர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார்.
தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில குழு உறுப்பினர்கள் அமுதா பெருமாள், தொகுதி பொருளாளர் ராஜா, தசரதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். துணைச் செயலாளர் தாமோதரன் நன்றி கூறினார். மாநாட்டில் உள்ளாச்சி தேர்தலில் போட்டியிடுவது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஓட்டு வங்கியை கூடுதலாக்குவது, விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவது தடுத்திட வேண்டும்.
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சமுதாய நலவழி மையமாக தரம் உயர்த்திட வேண்டும். கொம்யூன் அளவிலான தலைமை நூலகம் அமைக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை திறந்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






