என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மாநில அந்தஸ்து வழங்காவிட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்
- அனைத்து கட்சிகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்.
- புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும் என மத்திய உள்துறை இணை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய பா.ஜனதா அரசு பாராளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்தனர்.
புதுவையில் மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப் பட்டுள்ளது. ஆனால் புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும் என மத்திய உள்துறை இணை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது.
இன்னும் 3 மாதத்திற்குள் புதுவைக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து கட்சிகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம். பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் அழைப்பு விடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






