என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இதய நாள் விழிப்புணர்வு
    X

    இதய நாள் விழிப்புணர்வு நடைபெற்ற காட்சி.

    இதய நாள் விழிப்புணர்வு

    • புதுவை கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் மற்றும் கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனை சார்பில் உலக இதய நாள் குறித்து விழிப்புணர்வு நடந்தது.
    • இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கான செயல்பாடுகள், மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் மற்றும் கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனை சார்பில் உலக இதய நாள் குறித்து விழிப்புணர்வு நடந்தது.

    புதுவை கன்னி யக்கோவில் ராஜகவுரி நகரில் உள்ள வீ ஹெர்பல் கேர் நிறுவனத்தில் நடைபெற்ற இதயநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இதயம் காப்பத்தற்கான வழிமுறைகள், இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கான செயல்பாடு கள், மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். இன்முகத்துடன் உள்ளுணர்ந்து சிரிக்க வேண்டும் என அக்குபஞ்சர் கவுன்சிலின் தலைவரும், தி சுசான்லி குழுமத்தின் சேர்மனுமான டாக்டர் ரவி உரையாற்றினார்.

    முன்னதாக வி ஹெர்பல் கேர் நிறுவனத்தின் மேலாளர் தாயார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் தலைமை மருந்து உற்பத்தி மேலாளர் சுந்தர் நன்றி கூறினார்.

    Next Story
    ×