என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம்
    X

    சுகாதாரத்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம்

    • புதுவை சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டும்.
    • தேசிய சுகாதார இயக்க ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ.10 ஆயிரம் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டும்.

    7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் உயர்த்தப்பட்ட நோயாளி பராமரிப்பு படி, செவிலியர் படி உள்ளிட்ட இதர படிகளை சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அமலாக்க வேண்டும். அரசாணைப்படி பணிக்கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்.

    தேசிய சுகாதார இயக்க ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ.10 ஆயிரம் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை மாநில சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில அனைத்துப் பணியாளர் பிரிவு ஊழியர்களும் 7.30 மணி முதல் 9 மணி வரை பணிகளை புறக்கணித்து அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் வாயில் கூட்டம் நடத்தினர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கூட்டமைப்பு தலைவர் அன்புசெல்வன், பொதுசெயலாளர் லட்சுமணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். ஜானகி, பாக்கியவதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    சுகாதார ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் சாஹீராபானு, ராதாமுத்து உள்ளிடட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். போராட்டத்தில் செவிலியர், மருந்தாளுனர், கிராமப்புற செவிலியர், வார்டு அட்டண்டர், நர்சிங் ஆர்டர்லி, அறுவை கூட ஊழியர்கள், உள்பட அனைத்து பிரிவு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×