என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்-அ.தி.மு.க. வலியுறுத்தல்
    X

    ஆலோசனைக்கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசிய போது எடுத்த படம்.

    தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்-அ.தி.மு.க. வலியுறுத்தல்

    • ஜெயலலிதா பிறந்த நாளில் அரசு பிரசவ மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிப்பது.
    • காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம், எக்டருக்கு ரூ.37 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனைக்கூட்டம் உப்பளம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை புதுவை கட்சி தலைமை அலுவலகத்தில் ஏழை-எளிய மக்களுக்கு, இலவச வேட்டி சேலை, தட்டு வண்டி, தள்ளுவண்டி, சலவைப் பெட்டி, ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மிஷன், மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடுவது.

    ஜெயலலிதா பிறந்த நாளில் அரசு பிரசவ மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிப்பது.

    ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக முதல்- அமைச்சர் அறிவிக்க வலியுறுத்துவது அரசு, அரசு சார்பு, கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை அரசு வழங்க வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தல், ரேஷன்கடை திறப்பு, பஞ்சாலைகள் திறப்பு என தேர்தல் அறிவிப்புகளை புதுவை அரசு நிறைவேற்ற வேண்டும்.

    காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம், எக்டருக்கு ரூ.37 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் மாநில செயலாளர் நடராஜன்,, மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள், எம்.ஏ.கே. கருணாநிதி, நாகமணி,காந்தி, கிருஷ்ணமூர்த்தி, உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம்,

    மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன்,நகர தலைவர் கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×