search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாண்லேவில் துணிப்பை விற்பனை செய்யும் திட்டம்- கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்
    X

    பாண்லேவில் துணிப்பை விற்பனை செய்யும் திட்டம்- கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்

    • ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய மார்க்கெட்டில் நடந்தது.
    • பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய மார்க்கெட்டில் நடந்தது. நிகழ்ச்சியினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    பாண்லே கடைகள் மூலம் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் மாற்றாக குறைந்த விலையிலான துணிப்பைகள் மற்றும் இதர பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் ஒருமுறை பயன்பாட்டு நெகிழியை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அறிவியல் தொழில்நுட்பம்- சுற்றுச்சூழல் துறைச் செயலர் ஸ்மிதா ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×