search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிரைனி ப்ளூம்ஸ் இன்டர் நேஷனல் பள்ளி மாணவிக்கு பரிசு
    X

     போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழக்கிய காட்சி

    பிரைனி ப்ளூம்ஸ் இன்டர் நேஷனல் பள்ளி மாணவிக்கு பரிசு

    • ஆராய்ச்சி மையத்தில் மாநில அளவி லான ஓவியப்போட்டி நடந்தது.
    • பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

    புதுச்சேரி:

    இந்திய அரசு எரிசக்தி நுகர்வுத் துறை சார்பில், கடந்த 18-ந்தேதி புதுச்சேரி அன்னை தெரேசா முதுநிலை நல அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாநில அளவி லான ஓவியப்போட்டி நடந்தது.

    இதில் திருக்கனூர் பிரைனி ப்ளூம்ஸ் இன்டர் நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவி பிரிதிஷா முதல் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். பரிசுகள் வென்ற மாணவிக்கு புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை முதன்மை இயக்குனர் பிரியதர்ஷினி, சென்னை ஆர்.இ.சி முதன்மை திட்ட மேலாளர் தாரா ரமேஷ் ரூ.50 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி மாண வியை வாழ்த்தி பேசினர்.

    அவரைத் தொடர்ந்து அடுத்த நிலையாக, தேசிய அளவிலான ஓவியப் போட்டிக்கு செல்லும் மாணவி பிரதிஷாவிற்கு பயிற்சி அளித்த ஓவிய ஆசி ரியர் குமரவேல் ஆகியோரை பள்ளியின் தாளாளர் அருண்குமார், துணை தாளாளர் திவ்யா ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×