என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
எம்.எல்.ஏ.க்களின் அவசரப்பணிக்குதட்டச்சர் நியமிக்க வேண்டும்-கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கை
- புதுவை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்கின்றார்.அதன் முடிவுகள் என்ன என்பதனை மாநில மக்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.
- உள்ளாட்சி நிர்வாகம் உள்ளாட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்கின்றார்.அதன் முடிவுகள் என்ன என்பதனை மாநில மக்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். அமைச்சரவை பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அரசு செயல்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் கோப்புகளை திருப்பி அனுப்புதல் கூடாது.
சட்டப்பேரவை செயலகத்தில் பணியில் உள்ள தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து வேறு துறைக்கு மாற்றுங்கள். சட்டப்பேரவை செயலகத்தில் எம்.எல்.ஏக்களின் அவசரப்பணிக்கு ஒரு தட்டச்சர் தனியாக நியமிக்க வேண்டும்.
உள்ளாட்சி நிர்வாகம் உள்ளாட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். கோவில் வரியினை முறையாக வசூலிக்க கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
புதுவை மாநிலத்தில் உள்ள 30 மருத்துவமனைகளின் தரத்தினை உயர்த்துங்கள்.புதிய வருவாய் கிராமங்களை உருவாக்க வேண்டும். உழவர்கரை தாலுக்கா வை இரண்டாகப் பிரித்து புதிய தாலுக்கா என்று உருவாக்க வேண்டும். வி.ஏ.ஓ.,வி.ஏ. பணியிடங்களை நிரப்ப வேண்டும் .
முகத்துவாரப் பகுதியில் தூர்வார கே.எஸ்.ஆர். என்ற நிறுவனம் பணி செய்தது. 7 லட்சம் கியூபிக் மீட்டர் மண் அள்ள ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டபடி மண் அள்ளவில்லை. அரசு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கடந்த 5 நிதியாண்டுகளில் பேரம் பேசி வாங்கியக் கடனில் 40% சதவிகிதம் தான் செலவு செய்யப்படுகிறது.
மத்திய அரசினுடைய கடனை தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை குழு மத்திய அரசினை நாட வேண்டும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்