என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு 1-ந் தேதி இறுதி கலந்தாய்வு
- கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தகவல்
- கலந்தாய்வில் மாணவர்கள், பெற்றோருடன் மதிப்பெண் பட்டியல் நகல், மாற்று சான்றிதழ், சாதி, குடியிருப்பு சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
புதுச்சேரி:
புதுவை கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்தது. இதில் இடம் கிடைக்காதவர்கள், சமீபத்தில் நடந்த துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி என்.கே.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இந்த கலந்தாய்வில் மாணவர்கள், பெற்றோருடன் மதிப்பெண் பட்டியல் நகல், மாற்று சான்றிதழ், சாதி, குடியிருப்பு சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
அதில் 300 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு 1-ம் தேதி காலை 9.30 மணிக்கும், 299 முதல் 250 வரை பெற்றவர்களுக்கு மதியம் 2.30 மணிக்கும், 249 முதல் 175 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும். குடியிருப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு வரும் 2-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்