search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பள்ளிகளுக்கிடையே கட்டுரை-பேச்சு போட்டி
    X

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.

    அரசு பள்ளிகளுக்கிடையே கட்டுரை-பேச்சு போட்டி

    • பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வர வேற்புரை வழங்க பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமையுரை ஆற்றினார்.
    • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மோகன் பிரசாத் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கல்வித்துறை சார்பில் மொழி நல்லிணக்க நாளை கொண்டாடும் வகையில் அரசு பள்ளி களுக்கு இடையே பல்வேறு இந்திய மொழிகளில் கட்டுரை பேச்சு மற்றும் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வர வேற்புரை வழங்க பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமையுரை ஆற்றினார். பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சாய் வர்கீஸ், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மோகன் பிரசாத் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    இறுதியாக பள்ளியின் பொறுப்பாசிரியர் செம்பியன் நன்றி கூறினார்.இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை மனையியல் விரிவுரையாளர் தெய்வக் குமாரி மற்றும் தாவரவியல் விரிவு ரையாளர் அன்பு மொழி செய்திருந்தனர்.

    Next Story
    ×