என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
சுற்றுச்சூழல் தின போட்டி; மாணவர்களுக்கு அழைப்பு
- போட்டிகள் குறித்த விரிவான தகவல்களை இணையதளத்தில் காணலாம்.
- வாழ்க்கை முறை திட்டத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப் படுகிறது.
புதுச்சேரி:
அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் யாசம்லட்சுமிநாராயண ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:
ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை திட்டத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப் படுகிறது.
எரிபொருள் சிக்கனம், தண்ணீர் சிக்கனம், பிளாஸ்டிக் பயன்பாடு குறைத்தல், உணவுப் பொருட்களின் நிலைத்தன்மை, ஆரோக்கிய வாழ்க்கை முறை உட்பட 7 கருப்பொருளில் தனி மனித வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவது திட்டத்தின் நோக்கம்.
இதுகுறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் 30ந் தேதி முதல் ஜூன் 3-ந் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறையின் கீழ் செயல்படும் காலநிலை மாற்ற பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. போட்டிகள் குறித்த விரிவான தகவல்களை இணை யதளத்தில் காணலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






