search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

    • பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக அட்டெண்டராக வேலை செய்து வருகிறார்.
    • பாகூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் மணமேடு எம்.பி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (40). பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக அட்டெண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ராஜேஷ் (15) மகனும், விமாஷினி (13) என மகளும் உள்ளனர்.

    ராதாகிருஷ்ணன் கடந்த 2 மாதங்களாக பாகூர் கன்னியகோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ராதாகிருஷ்ணன் மது குடிக்கும் பழக்கம் உடையவர். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி சரஸ்வதியிடம் தகராறு ஈடுபடுவார். சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன் மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சரஸ்வதி பணம் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் சரஸ்வதி வெளியே தள்ளி கதவை பூட்டிக் கொண்டார். வெகு நேரமாகியும் கணவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த சரஸ்வதி ஜன்னல் வழியாக பார்த்த போது வேட்டியால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாகூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×