என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
- நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த 2 நாட்களாக தனது மனைவியிடம் யாரோ தன்னை அழைக்கிறார்கள் என கூறி வந்தார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் நந்தமேடு தோப்பு தெருவை சேர்ந்தவர் நிர்மல்(வயது32). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகன் மற்றும் 8 மாத பெண் கைக்குழந்தை உள்ளது. இவர் கடந்த சில நாட்களாக குறைந்த ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த 2 நாட்களாக தனது மனைவியிடம் யாரோ தன்னை அழைக்கிறார்கள் என கூறி வந்தார். அவருக்கு அவரது மனைவி ஆறுதல் கூறி வந்தார்.
இந்த நிலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற நிர்மல் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் அங்குள்ள விநாயகர் கோவில் எதிரே மின் ஊழியர் குடியி ருப்பு பகுதியில் உள்ள வேப்பமரத்தில் நிர்மல் தூக்கு போட்டு தொங்குவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரது மனைவி மணி மேகலைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மணி மேகலை மற்றும் அவரது உறவினர்கள் அலறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தூக்கில் இருந்து நிர்மலை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நிர்மல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






