search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விபத்தில் எலக்ட்ரீஷியன் பலி
    X

    கோப்பு படம்.

    விபத்தில் எலக்ட்ரீஷியன் பலி

    • பத்துக்கண்ணு சந்திப்பில் வாய்க்கால் கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்ததில் எலக்ட்ரீஷியன் பலியானார்.
    • ஒரு சிறிய பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விடூர் அணையில் இருந்து ஊசுடேரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் கட்டையில் மோதி கவிழ்ந்தது.

    புதுச்சேரி:

    பத்துக்கண்ணு சந்திப்பில் வாய்க்கால் கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்ததில் எலக்ட்ரீஷியன் பலியானார்.

    புதுவை ரெட்டியார்பா ளையம் மரியாள்நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் தமிழ்வேந்தன்(வயது35). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் வேலை விஷயமாக தமிழ்வேந்தன் மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் அருகே உள்ள ராமநாதபுரத்துக்கு சென்றுக்கொண்டிருந்தார். பத்துக்கண்ணு சந்திப்பில் ஒரு சிறிய பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விடூர் அணையில் இருந்து ஊசுடேரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் கட்டையில் மோதி கவிழ்ந்தது.

    இதில் தமிழ்வேந்தனுக்கு மார்பு எலும்பு நொறுங்கி போனது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ்வேந்தன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×