என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ஆபரேசனுக்கு பயந்து மூதாட்டி தற்கொலை
- புதுவை பூமியான்பேட் ஜவகர் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி பூங்கொடி வயது (64) கடந்த 6 மாதங்களாக தனியாக வசித்து வருகிறார்.
- தனக்கு ஆபரேசன் செய்ய விருப்பம் இல்லை என பூங்கொடி அவரது மகனிடம் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பூமியான்பேட் ஜவகர் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி பூங்கொடி வயது (64) கடந்த 6 மாதங்களாக தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு தைராய்டு பிரச்சினை இருந்தது. இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று ஆபரேசன் செய்ய தேதி ஒதுக்கியிருந்தனர்.தனக்கு ஆபரேசன் செய்ய விருப்பம் இல்லை என பூங்கொடி அவரது மகனிடம் கூறியுள்ளார். அவர்கள் பூங்கொடியை சமாதானம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் பூங்கொடி அவரது அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டுக்கதவு வரை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று அவரது மகன்கள் பார்த்தனர். அங்கு பூங்கொடி பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ரெட்டியார் பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






