search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை
    X

    கோப்பு படம்.

    முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை

    • வில்லியனூர் அருகே மனைவி மனநிலை பாதிக்கப்பட்ட வேதனையில் முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • மேல் சிகிச்சைக்காக சாரங்க பாணியை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    புதுச்சேரி

    வில்லியனூர் அருகே மனைவி மனநிலை பாதிக்கப்பட்ட வேதனையில் முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே பங்கூர் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் அன்பழகன். ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவருடன் இவரது தந்தை சாரங்கபாணி (வயது86). தாய் கோவிந்தம்மாள்(81) ஆகியோர் வசித்து வந்தனர்.

    இதற்கிடையே கோவிந்தம்மாள் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனைவி மீது பாசமாக இருந்து வந்த சாரங்கபாணி மனவேதனையில் இருந்து வந்தார்.

    இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சாரங்கபாணி சம்பவத்தன்று எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சாரங்க பாணியை ஜிப்மர் ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாரங்கபாணி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×