என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிபோதையில் ரகளை செய்தவர் கைது
    X

    கோப்பு படம்.

    குடிபோதையில் ரகளை செய்தவர் கைது

    • 2 வாலிபர்கள் குடிபோதையில் நின்று கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தனர்
    • அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கனூர் அருகே லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை பின் புறம் நேற்று இரவு 2 வாலிபர்கள் குடிபோதையில் நின்று கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த காட்டேரிக்குப்பம் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் திருவக்கரை காளியம்மன் கோவில்தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் லிங்கா ரெட்டிப்பளையம் தோப்பு தெருவை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×