என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நீட் தேர்வு ரத்து ரகசியத்தை தி.மு.க. வெளியிட கோரி ஆர்ப்பாட்டம்
    X

    கோப்பு படம்.

    நீட் தேர்வு ரத்து ரகசியத்தை தி.மு.க. வெளியிட கோரி ஆர்ப்பாட்டம்

    • புதுவை அ.தி.மு.க. அறிவிப்பு
    • அ.தி.மு.க. தொண்டர்கள் மீது தாக்குதல்களை நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்வரும் 20-ந் தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநாட்டை நடத்தும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பை செயல்படுத்த தொண்டர்கள் மாநாட்டு பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. இந்த மாநாட்டை கண்டு பயந்து ரத்து செய்ய முடியாத நீட் தேர்வு பிரச்சினைக்காக உண்ணாவிரதம் என்ற அறிவிப்பை தி.மு.க. அறிவித்திருக்கிறது.

    மாநாட்டிற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கட்சி தொண்டர்கள் அலை அலையாக வரும் போது தி.மு.க.வினர் உண்ணாவிரதம் என்கின்ற பெயரில் ஆங்காங்கே தி.மு.க. குண்டர்களை வைத்து அ.தி.மு.க. தொண்டர்கள் மீது தாக்குதல்களை நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    மதுரை மாநாடு வருகிற 20-ந் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி 3 மாதத்திற்கு முன்பே அறிவித்தார். நேற்றைய தினம் அதே நாளில் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் என அறிவித்திருப்பது அநாகரீக செயலாகும்.

    பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு உச்சநீதிமன்றம் இறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் நீட் தேர்வை ரத்து செய்வோம் தி.மு.க. தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றது.

    பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியில் அமர்ந்த பிறகு 2021 செப்டம்பர் மாத்த்தில் நீட் தேர்வு ரத்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 5.5.2022 அன்று கவர்னர் ஜனாதிபதிக்கு அந்த தீர்மானத்தை அனுப்பியுள்ளார்.

    இது சம்பந்தமாக நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தி.மு.க, காங்கிரஸ் எம்.பி.க்களும் வாய்திறக்காத நிலையில் தற்போது தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த நீட் சம்பந்தமாக உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுமானால் அதற்கு முழு பொறுப்பும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஏற்க வேண்டும்.

    தலைமை கழகத்தின் அனுமதி பெற்று நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட தி.மு.க.வை வலியுறுத்தி இன்னும் ஒரிரு நாளில் அ.தி.மு.க. சார்பில் புதுவையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். எனவே உடனடியாக நீட் தேர்வு ரகசியத்தை தி.மு.க. வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    Next Story
    ×