search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டியில் தீபாவளி சிறப்பு அங்காடி
    X

    கோப்பு படம்.

    தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டியில் தீபாவளி சிறப்பு அங்காடி

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்
    • சிறப்பங்காடி வரும் 11-ந் தேதி வரை காலை 10 முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

    புதுச்சேரி:

    அமுதசுரபி, கான்பெட் மூலம் தீபாவளி சிறப்பு அங்காடி விற்பனை மையம், தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடக்கவிழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அரசு கொறடா ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், கூட்டுறவுத்துறை செயலர் நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்க பதிவாளர் யஷ்வந்தையா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த சிறப்பங்காடி வரும் 11-ந் தேதி வரை காலை 10 முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

    Next Story
    ×